Wednesday, June 21

When Krishna suffers high fever

 When Krishna suffers high fever

Every year, in the month of Ashadha (June-July) when the summer is at its peak, lord jagannath baladev and Subhadra step out for a cooling bath unable to bear the heat inside the temple. This happens on Snana Purnima.
Anasara Lila
Due to the prolonged bath with 108 pots of water under the blazing sun, they fall sick and so have to take rest for 15 days and undergo treatment for their illness.
And so every year, for the fortnight that follows, Krishna (Lord Jagannath) baladev and Subhadra falls ill and are kept in a recovery chamber called anasar ghar.
Here Vaids and the priests look after them and they are fed only fruits and water mixed with cheese and herbal medicines.
The Deities are treated by the Raj Vaidya (the King’s physician) with specific medicines (Dasamulas).
During all these days the daily rites of the temple remain suspended. Due to the sacred bath with 108 pots of water, the colours painted on the deities ususally fade out so the deities are decorated with new colors.
When they recover, appetite returns and they wish to go out for walk and to eat the food cooked by their aunt Gundicha, which also symbolizes Vrindavan.
Whose house is a little away from his temple. Hence, on the 16th day the Deities appear in their new forms when they are ready for the public view.
The festival of the first appearance of the Lord Jagannath (Krishna) to his devotees is called ‘Netrotsava’ (festival for the eyes) or ‘Nava Yauvanotsava’. (festival of the ever new youth).
And Thus Krishna, with his siblings, steps on his grand chariot and makes his way there.
This is the start of the famous nine-day Jagannath Rath Yatra.


Friday, December 30

வைரக்குஞ்சிதபாதம்

"வைரக்குஞ்சிதபாதம் திருவாதிரை அன்று சமர்ப்பித்த பெரியவா"
 (பொள்ளாச்சி ஜெயம் பாட்டிக்கு கிடைத்த அற்புத அனுபவம்) நன்றி-மகாபெரியவா புராணம்.+திரு இந்திரா சௌந்தர்ராஜனும் புதுயுகம் டி.வி.யில் 21-12-2018 அன்று சொன்னார் 

 சிதம்பரம் நடராஜரின் குஞ்சித பாதத்திற்கு வைரத்தால் கவசம் செய்து வைரக் குஞ்சித பாதம் அணிவிக்க வேண்டும் என்று ஶ்ரீ பெரியவா விரும்பினார்கள். நடராஜருக்கு வைரக்குஞ்சித பாதம். பெரியவா எது செய்தாலும் அது அவர் வழிச்செல்லும் அன்பர்களுக்காகத்தானே! அவரே ஸர்வேச்வரன். அவர் ஏன் கோவிலுக்குப் போகவேண்டும். ராமர் விஷ்ணுவின் அவதாரம். மானுஷ்ய தர்மத்தைக் கடைப்பிடிக்கவில்லையா? அது போலத்தான். சரி. குஞ்சித பாதம் செய்வதென்று தீர்மானித்துவிட்டார்கள். மடத்தில் ஶ்ரீகார்யம், மற்றும் சில முக்யமானவர்களை அழைத்து discussion முடிந்து decision எடுக்கப்பட்டது. அடுத்த step…..அளவு வேண்டும். யாரிடம் இந்தப் பணியை ஒப்படைக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்த்து எல்லோரும் காத்திருந்தார்கள். 

அன்றைய தினம் அம்மா தரிசனத்திற்குச் சென்றிருந்தாள்.(பொள்ளாச்சி ஜெயம் பாட்டி) “இங்கே வா”. பெரியவா அழைக்கிறார்கள். “இங்கே பேசினதெல்லாம் கேட்டுண்டிருந்தயோனோ”. அம்மா “ஆமாம் கேட்டேன்”… “சரி சிதம்பரத்துக்குப் போய் நடராஜர் குஞ்சித பாதத்தோட அளவை எடுத்துண்டு வா”. அம்மாவிற்கு ஒரே shock. எவ்வளவோ விஷயம் தெரிஞ்சவாளெல்லாம் இருக்கும்போது தன்னைப் போகச் சொல்றாளே என்று தயக்கம். மெள்ள மறுபடியும் கிட்டப் போய் “நானா போகணும்” என்று அம்மா கேட்டாள். உடனே பெரியவா “ஆமாம் ஆமாம் நீதான் போகணும். போ !!!” கூட நின்றுகொண்டிருந்த ஒரு பெரியவர் நான் வேணா கூடப் போகட்டுமா என்று கேட்க, ” வேணாம் வேணாம் அவளே போகட்டும்.” என்று சொல்லிவிட்டார். பெரியவா Supreme Court. அப்பீலே கிடையாது. சொன்னா சொன்னதுதான். அம்மா சிதம்பரத்திற்குக் கிளம்பிவிட்டாள். சிதம்பரம் நடராஜா ஸன்னிதியில் நின்று கொண்டு சிலரிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தாள். யாரும் கண்டு கொள்ளவில்லை. ஒரு நாள் பூராவும் ஒன்றும் நடக்கவில்லை. 

மறு நாள் காலை ஸ்ன்னிதியில் நின்று கொண்டிருந்தபோது ஒரு வயஸான தீக்‌ஷிதர் “என்னம்மா நேற்றிலிருந்து நிக்கறையே. உனக்கு என்ன வேணும்”. என்று கேட்க அம்மா விஷயத்தைச் சொன்னாள். என்னடா இது மடிசார் கட்டிக்கொண்டு ஒரு பெண்மணி பெரியவாள் அனுப்பினார் எனறு வந்து நிற்கிறாளே உண்மையாக இருக்குமா என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை. இங்கே வா என்று சித்சபைக்கு அழைத்துச் சென்றார். ஒரு வாழை நாரை எடுத்து நடராஜரின் குஞ்சித பாதத்தை கணக்காக அளவெடுத்து அம்மாவிடம் கொடுத்து, பெரியவாளுக்கு நடராஜாவின் ப்ரசாதத்தையும் கொடுத்தனுப்பினார். அம்மாவுக்கு ஒரே ஸந்தோஷம். பெரியவா சொன்ன வேலை நல்லபடியாக முடிந்துவிட்டதே!
பிறகு, யாரென்றே தெரியாத இந்த மடிசார் மாமியை அழைத்துச்சென்று ஸ்வாமி மற்றும் அம்பாளுடைய நகைகளையெல்லாம் காண்பித்து , ஒரு தீக்‌ஷிதர் இல்லத்தில் ஸ்வாமி ப்ரஸாதங்களை ஆகாரமாக அளித்து அனுப்பி வைத்தார்கள். ஒரு நாள் பூராவும் யாரென்றே கண்டுகொள்ளப்படாதவளுக்கு ராஜ மரியாதை. பெரியவாளுடைய representative எனறு தெரிந்துவிட்டதே. மறு நாள் பெரியவாளிடம் அளவைக் கொடுத்துவிட்டு, வைரக்குஞ்சிதபாதத்திற்கு தன்னுடைய காணிக்கையாக ஒரு வைரத்தையும் அம்மா பெரியவாளிடம் ஸமர்ப்பித்தாள். 

பெரியவா ஆக்ஞைப்படி செய்யப்பட்ட வைரக்குஞ்சித பாதத்திற்கு பலரிடமிருந்து பெறப்பட்ட வைரங்களில் முதல் வைரம் அம்மாவுடையதுதான். அன்று மாலை பெரியவா விச்ராந்தியாக இருந்த சமயம் அருகில் சென்று அம்மா கேட்டாள். “மடத்திற்கு வேண்டிய, விஷயம் தெரிஞ்ச எவ்வளவோ பேர் இருக்கா. பெரியவா ஒரு வார்த்தை சொன்னா உடனே செய்து கொடுக்க எவ்வளவோ பேர் இருக்கா. இந்தக்காரியத்திற்கு என்னை ஏன் பெரியவா அனுப்பினா-ன்னு தெரிஞ்சுக்கலாமா”. உடனே பெரியவா அம்மாவைப் பார்த்து “அவசியம் தெரிஞ்சுக்கணுமோ”. என்று. கேட்க, “பெரியவா தெரிஞ்சுக்கலாம்னு சொன்னா தெரிஞ்சுக்கறேன்” என்றாள். பெரியவா: “குஞ்சித பாதம் எந்த காலில் இருக்கு””. அம்மா: “இடதுகாலில்” பெரியவா: இடது கால் யாருடையது ? அம்மா: யோசித்தாள். ஆஹா சிவன் அர்த்தனாரி அயிற்றே என்று நினைவிற்கு வந்தது. உடனே “இடது கால் அம்பாளோடதுதான்.” என்றாள். பெரியவா: உடனே பெரியவாள், ” ஒரு பெண்ணோட பாதத்தை அளவெடுக்க ஒரு ஆம்பளையையா அனுப்பறது. அதான் உன்னை அனுப்பினேன். இப்பொ புரிஞ்சுதா”.

Monday, February 7

darshan of bhothams

ஒரு அற்புத ஞானி!!!

ஒருமுறை  திருவண்ணாமலையில்  எங்கோ ஒரு மண்டபத்தில் சேஷாத்திரி ஸ்வாமிகள் அமர்ந்திருக்கிறார்.    
அவர் எப்போது எங்கே இருப்பார்  என்று ப்ரம்ம தேவனுக்குக்  கூட தெரியாது.
வயிறு பசித்தாலும் சொல்லத்  தெரியாது.  யாரோ  பக்தர் ஒருவர்  பார்த்து விட்டார்.  ஓடிப்போய்   உணவு பொட்டலம் ஒன்றைக்  கொண்டுவந்து  ஸ்வாமிகளிடம்  கொடுத்து, ''சுவாமி இதை சாப்பிடுங்கோ'' என்கிறார்.
ஸ்வாமிகள் அரைமனதாக கைகளில் அதை வாங்கிக்கொண்டு  ஒரு வாய்  போட்டுக் கொள்கிறார். என்ன தோன்றியதோ?  அப்படியே  பொட்டலத்தில் இருந்த உணவை கைகளால்  அள்ளி  மேலும் கீழும்  பக்கத்திலும் வீசினார். பக்தருக்கு  ஒன்றும்  புரியவில்லை.  ஏன் இப்படி செய்தீர்கள்  என்று  எப்படிக் கேட்பது?  


தைரியத்தை  வரவழைத்துக் கொண்டு  ''சாப்பிடாமல்   இப்படி கீழே இறைக்கிறீர்களே,  சுவாமி"  என முனகினார்.

''நீ எனக்கு தந்தை  நான் மட்டும் எப்படிடா சாப்பிடுவேன்.?  எல்லா தேவதைகளும்  ''எனக்கு எங்கே?'என்று கேட்கிறார்களே. அது தான் அவர்களுக்கும் கொடுத்துட்டேன்''  என்று சொல்லிக்கொண்டே  மீதி  பொட்டலத்தில் இருந்ததையும் வீசி எறிந்தார். 

பக்தருக்கு  இது  பைத்தியம் என்று தானே  தோன்றும்?

''நீங்க  சொல்ற   'பூதம் தேவதைகள்" என் கண்ண்ணுக்கு தெரியலையே''   

"ஓஹோ  நீ  அவ்வளவு பெரிய ஆளா? 
பூதம் தேவதைகளை எல்லாம்  கண்ணால் பார்த்தால் தான் நான் சொல்றதை நம்புவியா?"

தன்னையறியாமல் பக்தர்  "ஆமாம்" என தலையாட்டி விட்டார் .

''என்கிட்டே வா ''.    


அருகில் வந்த பக்தரின்   ரெண்டு  புருவங்களுக்கு மத்தியில்  தனது வலது கட்டை விரலை வைத்து  கொஞ்சம்  அழுத்தி விட்டு  ''கண்ணை மூடிட்டு  திறந்து பார்''
பக்தர் கண்களைத் திறந்து பார்த்தார்.
அவர்  அருகே  எதிரே, பக்கத்தில்  எங்கெல்லாம்  சேஷாத்திரி ஸ்வாமிகள்  உணவை வீசி  எறிந்தாரோ அங்கெல்லாம்  கோரைப்பற்களும் நீளமான நாக்கும் கொண்ட பெரிய  பூதங்கள் வேகமாக எடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தன.   

''ஐயோ''  என்று பெரிதாக அலறிய பக்தர்  அப்படியே  சேஷாத்திரி ஸ்வாமிகள் திருவடிகளில் விழுந்தார்...

ஓம் சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கே!!!!

J K SIVAN....

Sunday, January 23

Sri Seshadri Swamigal Jayanthi (Thai Hastham)

श्री गुरुभ्यो नमः

23.1.2022 : Sri Seshadri Swamigal Jayanthi (Thai Hastham)

"...Yet another day when i went to Thenambakkam, Maha Periyava sat like Seshadri Swamigal, with legs folded in the same way and his left hand palm holding the chin and asked ‘Is this not how HE is sitting?’ I could not make out any difference between the two of them and tears welled up in my eyes. It was some time later that Maha Periyava spoke those immortal words 

‘Will I ever become like Seshadri Swamigal?, Will I attain that level?’ 

If Maha Periyava, whom all of us know is saakshath Parameswaran said this of Seshadri Swamigal, at what level HE must have been?" 

- Writer Sri Bharanidharan

Monday, December 27

Mahasamadhi of Gnananandagiri Swamigal

Swami attained Mahasamadhi in the year 1974 (January). While Swami’s idol at Manimandapam is itself the symbol of the Swami as Dakshinamurti, the Mahalinga consecrated on top of Swami’s Samadhi per his instructions (to devotees well before his Samadhi) is the symbol of God’s coming into His creation and equally the symbol of the creatures passing, his departure into God. The Shivalinga stands between form and non-form, rupa and arupa, between manifestation and what can never be manifested.” The Swami had expressed a desire that the deepastamba — a column of lights’— which stood in front of the idol should be moved ahead a little further to a point from which one can pay obeisance to both the idol at Manimandapam and the Mahalinga at the samadhi.

The column of lights is the symbol of the Knowable, the self-luminous Brahman which is the inmost Self of everything, the Light even of lights, eulogised in the Gita as ‘Jyotisharriapi Tajjyotih’, By Its light, Its radiance, everything is lighted, illumined .

The Swami is wholly present in these signs “which are utterly ‘beyond’; yet at the same time and for that very reason most intimately within, the absolute of both transcendence and immanence”. His transcendence is the very source of immanence; “transcendence and immanence being no more than two of man’s words by which he tries to indicate simultaneously the beyondness and the withinness of the supreme mystery, both the rupa and the arupa of Being. 




Sunday, December 26

His Holiness Swami Haridhos Giri with rare Pictures

Guruji was born in the sacred month of Margkazi under the auspicious star of Utharattathi. He was born in the sacred land of Arunachala Sheitram. Bhagavan Ramana Maharishi says that for one who want to go into sainthood, one has to go through several stages.

But one who is born in this sacred Sheistram is a born saint. He needs no other qualifications to enter sainthood. He was named Hari, true to his spreading the Hari- Namasankirthan cult.

         His father, Sri Nott Annaji Rao, was an ardent Bhagavatha and a devotee of Swami Gnanananda Giri. His mother was very pious soul. They belonged to a royal heritage but the princely life with wealth and pleasure had no charm for Guruji his younger days. He too, like so may great saints, lived an ordinary life of a human being in this mundane world but his urge was taking him away from all these pleasures and pain-ridden life. Even while he was youth he was attracted to Namasankirthanam, the inspiration emanating from his father. Every Bhajan held in any part of the town he happened to live in, found him with eager eyes and throbbing enthusiasm. He gradually experienced in his own self a desire overflowing in his heart to take up this as his walk of life. Thus, the seed for a change in him was sown early in his teens.


In 1954, One day when Guruji was sitting on top of a hill enjoying the nature around him, Guruji saw a small fire about 200 yards away, he asked some of his workers at the tea plantation, where Guruji was working at that time to check it out. The workers went down the hill to check and told Guruji that they could not see any fire around that area. For one week Guruji saw that fire. Then one night Guruji heard a knocking at his door, as Guruji opened the door, Guruji again saw the fire there and suddenly it disappeared and His Master appeared before him. The Master told Guruji that his place is not here and that Guruji is for the world.
 
The next day Guruji told his boss about the fire and the appearance of His Master. His boss said that it is only an illusion and gave him 15 days leave. Guruji went back to Madras see his father Sri Natt Annaji Rao, who took him to see a saint in a temple outside the city. When Guruji saw him again, Guruji burst out crying. He was the Master that appeared from the fire. The Master told Guruji's father that Guruji is the reincarnation of love and affec­tion and he wanted to adopt him as his son.
Guruji was then sent to a cave in the Himalayas to do penance. For three years and half

years he mediated without water and food. Then the vision of His Master appeared asking Guruji to come back to his Master. In six months, Guruji walked from the before him Himalayas to Madras 
Guruji entire personality became aware at once that his innate urge could thus be fulfilled at the lotus feet of his Master, the light of Thapovanam, Sri Gnanananda Giri the moment Guruji touched Tapovanam. Spontaneous was the surrender too. The dawn of a Guru-Shisya­ Bhave life thus started.

Swami Gnanananda decided the very moment that Guruji must be to the world people. Swami Gnanananda also decided that the Knowledge and Happiness should be spread around the world and the only disciple who can spread this knowledge is Guruji.

After many trials and tests on this selected Chela, Swami Gnanananda Giri anointed Swami Haridhos girl (Guruji) and told him to spread and sing in the praise of the Lord - known as

Nama Sankirthanam, as the only pathway to salvation. Swami Gnanananda Gin gave Guruji His Paduka, blessed him with the hidden treasures of our great scriptures and commanded him to undertake a life of renunciation and the mission of spreading the great cult of Namasankirthanam with a musical discourses on saints and sages who had tread this soil in a similar manner.
Guruji together with Namaji formed the Gnanananda Namasankirthana Mandali, Madras in 1959. At the beginning they had only six members, Swami Gnanananda inaugurated the function.
Guruji preaches the truth, Guruji preaches happiness, Guruji preaches spiritualism through mediation, penance, yoga, praying and singing."But to attain the happiness, the wish you

desire, you must have a staunch belief in me, and what you are doing. Without belief, nothing will work" said Guruji.

Guruji then toured the world over to spread the Gospel of Swami Gnanananda Giri. Guruji wanted the cult of Namasankirthanam as a world movement, and it needs its own visual means of recognition and also when fraternity meets to bring about a sense of friendship, mutual trust and special greetings to be exchanged.

The Namasankirthanam movement piloted by Swami Haridhos Giri adopted the sign of two fingers "V". The two fingers represent symbolically "Radhe Krishna .Guruji also emphasized the need for a permanent establishment to propagate Namasankirthanam. It was the command of His Master, Guruji chose Dakshina Halasyam (Thennagur Village) as the abode for spreading the knowledge of Sanathana Dharina through the medium of Namasankirthanam.


To say a few words of our experiences with Guruji is only to say superficially what we know about him. His mind and thought, day and night is his LORD. A shining example of his is devotion to the Lord is perceivable when we sit before our Guruji to hear his Bhajans. It  stupendous; it flows from the heart of the Lord to the mind of the people.

Differences of caste and creed, race and religion, means nothing to him. He sees no distinction between rich and poor, friend and foe. He is with everyone but away from the one whose heart is not with him. In short, he is a man for the ordinary and divine for the devoted. So the divinity in him is experienced by the devotees. It is too difficult for anyone to picture the divine grace, expect to experience- any amount of writing would be an unfinished one.
One who has heard about Guruji would expect to see Him in beards and with matted locks; his body smeared with sandal paste and Thulasi Mala around his neck, and clothed in Ochre - coloured robes. But no, as he is fond of saying, he is just an ordinary devotee irrevocably

yoked to his Master and dedicated to service of his fellowmen. His endeavor is to see that humanity raises its level for the betterment of mankind. When atheism is rearing its head, Guruji is spreading the belief is God, a lofty spiritual knowledge combines with a child's heart in his communion with those who seek him and those he seeks out. Often he quotes that his mission is to see that every soul in this earth sings the praise of the "Lord" and the Great Souls with devotion, thus getting out of the egoistic lives.

With undaunted courage and a free heart, he pours forth from various platform the greatest necessity for today's men - to cast away their thirst and greed for enjoyment and self-satisfaction in this pain ridden mundane life and to join the select few great men of the past in realizing the goal through the easiest means the Namasankirthanam. Thousands remain

pinned to their seats to hear his mellifluous music accompanied by his brilliant eloquence on spiritual lives of yore. In order to propagate this ideal, under command of his Master, He parts of the world, like in Canada, Japan, U.S.A., Zambia, Sri Lanka, Australia and Singapore to serve the masses in variation spiritual and material avenues thus establishing a common ground for them to elevate themselves to higher realms of life.

With a great inspiration springing fourth by the constant communication with his Master, he has embarked on the great path of spiritual renaissance envisaged by his Guru. May all his devotees and yearning souls pray and get Guruji's blessing.





Monday, December 6

Kalpatharu


 


"மகான்களை, கற்பகத்தரு, காமதேனு, சிந்தாமணி என்று ஒப்பிட்டுச் சொல்லுகிறார்கள். நீ கற்பகத்தருவின் அடியில் அமர்ந்து, உனக்கு தேவையானதைக் கேட்டால், அனைத்தும் கிடைக்கும், உன்னிடம் ஒரு காமதேனுவோ, சிந்தாமணியோ இருந்தால், உன் விருப்பம் அனைத்தும் நிறைவேறும். அதே போல் தான் மகான்களும். ஆனால் ஒரு வித்தியாசம், நீ நினைக்கும் போது அல்ல, நான் நினைக்கும் போது"

- பகவான் யோகி ராம்சுரத்குமார்
'உண்மையுடன் ஒரு வாழ்வு'

Saturday, November 20

Saving Devotee from Dacoits

 இது பெரியவாளின் இன்னொரு பக்தையை பற்றியது .


கல்கத்தாவில், அந்த பக்தை கணவருடன் , அப்போது அவரது வேலை நிமித்தமாக

இருந்த கால கட்டத்தில் நடந்த சம்பவம்.


அன்றும் கணவர் ஆபீஸ் போன அப்புறம் வாசலில் பெல் அடித்ததும் , கதவை திறந்தார் , அந்த பெண்மணி . நக்சலைட்டுகள் 3- 4 பேர் திமு திமு என்று உள்ளே நுழைந்தும் என்ன செய்ய, என்றே தெரியாத அவர் தன்னை கொல்ல அவர்கள் தயாராக இருப்பதை அவர்கள் பேச்சின் மூலம் புரிந்து கொண்டார்.

பயத்தில் வெலவெலத்து போன அந்த மாது அவர்கள் கேட்ட படி சாய் போட்டு கொடுத்து விட்டு, அவர்களிடம் ஒரு போன்கால் போட்டு கொள்ள அனுமதி கேட்டார்.

சென்னையில் விடுதிஇல் படித்து வரும் தன் அன்பு குழந்தைகளிடம் ஒரு நிமிடம் பேசினார் .

நாளை எந்த செய்தி கேட்டாலும் அதை சுவாமி கொடுத்தது என்று எடுத்துகொள்ள வேண்டும் என்றார். வீட்டின் ஹால் பகுதிக்கு வந்த அவர் , பெரியவா படத்தையும் அதை அடுத்து இருக்கும் காளி மாதாவின் படத்தையும் பார்த்து பூரண பக்தி யோடு நமஸ்கரித்தார் . இன்னிக்கு ஏகாதேசி .இன்று இந்த சோதனைக்கு உளாகி இருக்கேனே என்று வருத்தப்பட்டார்

அவர்களை பார்த்து ஓரே போடாக போட்டு விடுங்கள். வேறு ஒன்றும் என்னை செய்து விடாதீர்கள் என்று மனமுருக சொன்னார். பெரியவா படத்தை பார்த்து மனமுருகி வேண்டினார். தரையில் அவரை வேண்டி கொண்டே படுத்தார்

அப்ப அந்த அதிசயம் நடந்தது. நக்சலைட்டுகள் மேலே பார்த்தவர்கள் கண்ணுக்கு , பெரியவா போட்டோ இருந்த இடத்தில் பயங்கர உருவத்தோடு பவதாரிணி காட்சி கொடுத்தாள் .காளி பக்தர்கள் ஆன அவர்கள் திகைத்து போனார்கள் .

ஒரு காளி இருந்த இடத்தில இப்ப எப்படி ரெண்டாவது உக்ர காளி வந்தாள் என்று ஸ்தம்பித்து போனார்கள். காளியை மதிக்கும் அவர்கள் அந்த அம்மையாரையும் அம்பாள் ரூபமாக பார்க்க தொடங்கினர்.

"மன்னித்து விடுங்கள் தாயே " என்று எடுத்தனர் ஓட்டம் .

கணவர் வந்தவுடன் கண்ணீரை அடக்க முடியாமல் சொரிந்த அந்த மாது உடனே பெரியவாளை பார்க்க காஞ்சிக்கு புறப்பட்டார். மடத்தில் என்றும் போல அன்றும் ஒரே கூட்டம் . வரிசையில் வந்த அந்த பெண்மணி பக்தி பெருக்கோடு கலங்கிய கண்களோடு பெர்யவாளை நமஸ்கரிக்க , "காமாக்ஷி காப்பதினாளா " என்று ஒரே வார்த்தையில் நடந்தது எல்லாம் தனக்கு தெரியும் என்பதை உணர்த்தினார் உம்மாச்சி தாத்தா.

உண்மையான குரு பக்திக்கு என்றும் ஒரு குறையும் வராது

Thursday, September 30

Debt free

 காஞ்சி சங்கர மடத்தில், ஒரு மாலை வேளை...மகா பெரியவரைத் தரிசிக்க ஏகக்கூட்டம் கூடியிருந்தது.

அப்போது, அவரது பார்வையில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் தென்பட்டார்.
அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர், தனக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த ராமு என்ற இளைஞரை அழைத்து, ""கியூவிலே பதினைந்தாவது ஆசாமியா நிக்கிறானே ஒரு புள்ளையாண்டான்! அவன் சைசுக்கு சரியா இருக்கிறாப்லே ஒரு சட்டை, பேண்ட்துணி வாங்கிட்டு வா! அதுக்குரிய பணத்தை ஆபீசிலே வாங்கிண்டு போ! பக்கத்திலே இருக்கிற முதலியார்

ஜவுளிக்கடையில் துணி எடுத்துண்டு வா!'' என்றார்.
ராமுவுக்கு பெரியவர் ஏன் இப்படி சொல்கிறார் என்ற விபரம் புரியவில்லை. ஆனாலும், 15 நிமிடங்களுக்குள் துணிமணியுடன் வந்து நின்றார். துணிமணிகளைப் பார்த்த பெரியவர், ""பேஷ்! பேஷ்! நன்னா இருக்குடா!'' என்று பாராட்டி விட்டு, ""நீ உடனே போய், ஒரு மூங்கில் தட்டில் நெறயபழங்கள், பூர்ண பலம் (மட்டைத் தேங்காய்) எல்லாம் எடுத்து வச்சுண்டு, இந்த துணிமணிகளை அதுமேலே வச்சுடு. நான் சொன்னேன்னு சொல்லி, மடத்து மேனேஜர் கிட்டே 6250 ரூபாயை ஒரு கவர்ல போட்டு, அதையும் தட்டுலே வச்சுடு. என்ன பண்ணணுங்கிறதே அப்புறமா சொல்றேன்!'' என்றார்.
இதற்குள் அந்த இளைஞர் சுவாமிகள் முன் வந்து விட்டார். பெரியவர் அவனை ஏறிட்டுப் பார்த்தார். ராமுவை அழைத்து, ""அந்த மூங்கில் தட்டை அவன் கையிலே கொடு.
அந்தப் பையனுக்கும், அவன் குடும்பத்துக்கும் நான் பூர்ண ஆசிர்வாதம் பண்றதா சொல்லு,'' என்று இன்முகத்துடன் கட்டளையிட்டார்.
அதன்படி, தட்டை அவன் கையில் ராமு கொடுக்க, அவன் குழப்பத்துடன் நின்றான்.
""ராமு! அவன் ரொம்ப குழம்பியிருக்கான். குழப்பம் ஏதும் வேண்டாம். அவன் வீட்டிலே பணத்தை பத்திரமா ஒப்படைக்கச் சொல்லு!'' என்றார் பெரியவர்.
இளைஞரும் ஏதும் புரியாமல் தட்டுடன் கிளம்பி விட்டார்.
அவரைப் போல குழம்பி நின்ற ராமுவிடம் பெரியவர்,""ராமு! ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் இது. அப்போ, நம்ம மடத்துக்கு ரொம்ப சிரமமான காலம். அப்போ, ஒரு ஆறுமாசம் நான் வடதேசத்துக்கு யாத்திரை கிளம்பினேன். மடத்து வாசலுக்கு வந்தேன். எதிர்த்தாப்புலே ஒரு செட்டியார் மளிகைக்கடை வச்சிருந்தார். மடத்துக்கு அங்க தான் மளிகை சாமான்கள் பற்று வரவு கணக்கு. வாசல்ல என்னைப் பார்த்ததும், செட்டியார் வேகமா ஓடி வந்தார்.
"என்ன செட்டியார்வாள்! சவுக்கியமா? வியாபாரம் எல்லாம் எப்படி போகுதுன்னு விசாரிச்சேன்! அவர் வாயைப் பொத்திண்டு பவ்யமா, "சுமாரா போறது சுவாமி! கஷ்டமாத்தான் இருக்கு! பெரியவா வடதேசம் போவதாவும், திரும்ப அஞ்சாறு மாசம் ஆகும்னும் சொன்னாங்க!' என்று மென்னு விழுங்கினார். பிறகு, "நாலஞ்சு மாசமா மடத்து மளிகை பாக்கி அப்படியே நிலுவைல இருக்கு! எனக்கும் கஷ்டம்! அதனாலே, உங்ககிட்ட குறையைச் சொல்லிக்கிறேன்,' என்றார்.
ஆறுமாதம் கழித்து வந்து பார்த்தால் கடை பூட்டியிருந்துச்சு! விசாரித்ததிலே, செட்டியார் மூணு மாசத்துக்கு முன்னாடி திடீர்னு காலகதி அடைஞ்சுட்டதா சொன்னா! அவரோட மனுஷாள்ளாம் எங்கே இருக்கான்னும் தெரியலே. அதற்கப்புறம் பாக்கி எவ்வளவுன்னு தெரிஞ்சு வச்சுண்டேன்! எண்ணூத்தி எழுபத்தஞ்சு முக்கால் ரூவா! அந்த பாக்கியை இன்னைக்கு தான் வட்டியும் முதலுமா தீர்த்து வச்சேன்! அந்த பையன் வேறு யாருமில்லே!
செட்டியாரோட பிள்ளை வயித்து பேரன். தாத்தாவுக்கு சேர வேண்டியதை, பேரன் கிட்ட அசலும் வட்டியுமா சேர்ப்பித்தாச்சு!
இனிமே கவலை இல்லை!'' என்றார்.
பெரியவர் செய்த இந்த கைங்கர்யம் நம் எல்லாருக்கும் ஒரு பாடம். யாருக்காவது கடன் கொடுக்க இருந்து, அவருக்கு கொடுக்க இயலாமல் போனால், அவர்களின் வாரிசைத் தேடிப்பிடித்து கொடுத்து விட வேண்டும்.
Jaya Jaya Shankara hare hare Shankara

Monday, September 13

Advice for true karma yogi

 "சூரியனைக் கும்பிடு, சகல புண்ணியமும் கிடைக்கும்"

விவசாயக் கூலி வேலை செய்யும் பெண்மணிக்கு
(என்ன ஆறுதல், என்ன கருணை)
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
கிராமத்தில் முகாம். விவசாயக் கூலி வேலை செய்யும் ஒரு பெண்மணி தரிசனத்துக்கு வந்தாள். பெரியவாள் எதிரில் கையைக் கூப்பிக்கொண்டு நின்றாள். நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது.
"என்ன வேலை பண்றே?"
"வயல் வேலைக்குப் போறேன் சாமி. ஆறு பசங்கள், மாமியா, எங்கிட்ட இருக்கு. காலையில் சோறாக்கி வெச்சுட்டுப் போயிடுவேன். இருட்டினப்புறம்தான் வீட்டுக்கு வருவேன். நான் எப்படி சாமியைக் கும்பிடறது? கோயிலுக்குப் போறது? உடம்பும் களைச்சுப் போவுது. சாமி கும்பிடவே நேரமில்லே, சாமி....."
பெரியவாளின் திருக்கண்கள் கருணையால் நிரம்பியிருந்தன.
"சாமி கும்பிடணும்னு நினைக்கிறயே, அதுவே சாமி கும்பிட்ட மாதிரிதான்.!.
"காலையிலே சூரிய உதயம் ஆனவுடன், கிழக்கே சூரியனைப் பார்த்து ஒரு கும்பிடு போடு. சாயங்காலம் விளக்கு வெச்சவுடனே மேற்கு திக்குப் பார்த்து ஒரு கும்பிடு போடு.
" நீ கர்மயோகி. ஒரு விநாடி நேரம் தெய்வத்தை நினைச்சாலே போறும்-சகல புண்ணியமும் கிடைச்சுடும்..."
பெண்மணி கண்களை துடைத்துக் கொண்டாள்.
'சூரியனைக் கும்பிடு-சகல புண்ணியமும் கிடைச்சுடும்!' என்ன, ஆறுதல்!
என்ன,கருணை!.
பெரியவாள் பலவகையான பழங்களை அந்தப் பெண்மணிக்குக் கொடுக்கச் சொன்னார்கள்.
தீனமாக வந்த மங்கை திரும்பிப் போகும்போது, அரசியாக - மங்கையர்க்கரசியாகப் போனாள்.
பெரியவாள் ஞான சூரியன். கும்பிட்டாலே போதும் - சகல புண்ணியமும் கிடைச்சுடும்!.

Friday, August 27

ஜகந்நாதர் சாப்பிட்ட மாம்பழங்கள்

 பூரி ஜகந்நாதரின் ஆத்யந்த பக்தர்களுள் ஒருவர் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாஸியா பாவுரி. ஒரு ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்த தாஸியா பாவுரி நெசவுத் தொழில் செய்து தான் தன் குடும்பத்தை காப்பாற்றி வந்தார். பலிகான் என்னும் கிராமத்தில் ஒரு சிறிய குடிசையில் தனது மனைவி மாலதியுடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். பல நாட்கள் இரண்டு வேளை சாப்பாட்டை கூட இத்தம்பதியினர் சாப்பிட்டது கிடையாது.

அப்போதெல்லாம் கிராமங்களில் ஒரு வழக்கம் இருந்தது. ஊருக்கு மத்தியில் ஒரு பிரார்த்தனை கூடத்தில் யாராவது மகாவிஷ்ணுவின் பெருமைகளை கூறும் பாகவதத்தை உரக்க படிப்பார்கள், விளக்கம் சொ

ல்வார்கள், இதை கேட்க பலர் செல்வதுண்டு.
ஜாதி மற்றும் தீண்டாமை கொடுமைகள் தலைவிரித்தாடிய காலகட்டம் என்பதால் இதில் பங்கேற்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்களில் தாஸியா பாவுரியும் ஒருவர். ஆனால், தாஸியா பாவுரியின் பக்திக்கு இந்த பாகுபாடெல்லாம் அணை போட்டுவிட முடியுமா? அந்த பிரார்த்தனை கூடத்தின் தொலைவில் நின்று, காதுகளை தீட்டிக்கொண்டு பாகவதத்தை கேட்பார். அந்த காலத்தில் ஜகந்நாதரின் புகழ் பெற்ற பக்தர்களாக விளங்கிய ‘பஞ்ச சேவகர்கள்’ என்பவர்கள் மிகவும் பிரசித்தம். அவர்களுள் ஜகந்நாத தாஸ் என்பவரை நம் தாஸியா தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டிருந்தார்.
ஒரு நாள் பலிகான் கிராமத்தை சேர்ந்த சிலர் பூரிக்கு யாத்திரை புறப்பட்டனர். தாஸியாவுக்கும் அவர்களோடு போகவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவரது பொருளாதார சூழ்நிலை அதற்கு இடம்கொடுக்கவில்லை. எனவே அவர்களிடம் ஒரே ஒரு தேங்காயை கொடுத்து பூரியில் ஜகந்நாதரிடம் சேர்பித்துவிடுங்கள் அதுவும் பூரி கோவிலின் நான்கு நுழைவாயில்களில் ஒன்றான அருணை ஸ்தம்பத்தில் தான் இதை சேர்பிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஜகந்நாதரே அதை பெற்றுக்கொள்ளும் வரையில் அவர்கள் அந்த இடத்தை விட்டு நகரக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
“என்னப்பா இது இவர் இப்படி கயிறு திரிக்கிறான்…” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டவர்கள், தாஸியாவை நோக்கி “யோவ் என்னய்யா தமாஷ் பண்றே? என்னவோ உன் தேங்காய்க்காகத் தான் அங்கே ஜகந்நாதர் காத்துக்கிட்டுருக்குற மாதிரி சொல்றே… போய் வேலையை பாரு என்று நகைத்தனர்.
அவர்களில் ஒருவர், “தாஸியா சொல்றது போல நடக்குதான்னு பார்ப்போமே…. இதுனால நமக்கு என்ன நஷ்டம். ஒருவேளை அப்படி நடந்துச்சுன்னா அதை நேர்ல பார்க்குற பாக்கியம் கிடைக்குமே ” என்றார்.
இதையடுத்து அவரிடம் தேங்காய் பெற்றுக்கொண்டு பூரிக்கு புறப்பட்டனர் அந்த குழுவினர். அங்கே பூரியை சென்றடைந்தபின்னர், அருணை ஸ்தம்பத்தின் கீழே அதை வைக்க, அடுத்த நொடி அந்த தேங்காய் மாயமாய் மறைந்துவிட்டது. அனைவரும் சிலிர்த்துப் போய்விட்டனர்.
இவர்கள் ஊருக்கு திரும்பி வந்தவுடன், தாஸியா கிட்டத்தட்ட ஒரு கதாநாயகன் போலானார். தாஸியாவுக்கு ஜகந்நாதரின் மீதிருந்த பக்தி நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. ஒரு நாள் ஜகந்நாதரை தரிசிக்க கால்நடைப் பயணமாக கிளம்பியே விட்டார். அவரிடம் நெசவு செய்து சேர்த்து வைத்திருந்த பணம் கொஞ்சம் இருந்தது. அதை கொண்டு ஜகந்நாதனுக்கு ஏதேனும் வாங்கிச் செல்லவேண்டும் என்று விரும்பினார். அந்த நேரம் பார்த்து ஒரு மாம்பழ வியாபாரி கூடையில் மாம்பழங்களை சுமந்தபடி சென்றான். அத்தனையும் உயர் ரக மாம்பழங்கள். அதை பார்த்த தாஸியா ஜகந்நாதனுக்கு மாம்பழங்களை வாங்கிச் செல்ல விரும்பினார். தன்னிடம் இருந்த பணம் அத்தனையும் கொடுத்து அந்த பழங்களை (கிட்டத்தட்ட 40 பழங்கள் இருந்தன) கூடையோடு சேர்த்து விலைக்கு வாங்கி தனது தலையில் சுமந்தபடி பூரி நோக்கி நடக்கலானார்.
பூரியில் ஜகந்நாத ஷேத்ரத்தில் சிம்மத் துவாரத்தை அடைந்தபோது, ஆலயத்தில் பணியாற்றிய அர்ச்சகர்கள் மற்றும் பிராமணர்கள் அனைவரும் அவரை சூழ்ந்துகொண்டு, நாங்கள் தான் ஜகந்நாதருக்கு மாம்பழங்களை படைப்போம் எங்களிடம் கொடுத்துவிடு என்று நச்சரித்தனர். இதன் பொருட்டு ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டனர்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தாஸியா, “நீங்கள் யாரும் என் ஜகந்நாதனுக்கு மாம்பழங்களை படைக்கத் தேவையில்லை” என்றார்.
“அப்போது பழங்களை வைத்துக்கொண்டு என்ன செய்வாய்? எங்களிடம் கொடுக்காமல் நீ எப்படி சுவாமிக்கு படைக்க முடியும்? இறைவனுக்கு படிக்காமல் அதை திரும்ப எடுத்துச் சென்று என்ன செய்வாய்? இதை இறைவனுக்கு என்று கொண்டு வந்துவிட்டு அவருக்கு படைக்காமல் நீ திருப்பி எடுத்து சென்றால் இதை யாரும் தொடமாட்டார்கள்” என்றனர்.
தாஸியா ஒன்றும் பேசவில்லை. ஒரு பத்து அடி பின்னே வந்தார். கீழே கூடையை வைத்தார்.
கோபுரத்தின் மீதிருந்த நீல சக்கரத்தை பார்த்தபடி, “ஜகந்நாதா இவை உனக்கு உரியவை. உனக்காக நான் கொண்டு வந்தவை. இவர்கள் இதன்பொருட்டு ஏன் சண்டையிட்டுக்கொள்கிறார்கள்? இவைகளை நானே உனக்கு தருகிறேன். அன்போடு ஏற்றுக்கொள்” என்று கூறி, இரண்டு மாம்பழங்களை எடுத்து நீட்டினார். அடுத்த நொடி அவரது கைகளிலிருந்து இரண்டு மாம்பழங்களும் மாயமாய் மறைந்துவிட்டன.
இப்படியே அனைத்து மாம்பழங்களும் தாஸியா எடுத்து நீட்ட நீட்ட மாயமாய் மறைந்துவிட்டன.
சுற்றியிருந்த அனைவரும் இதை ஆச்சரியத்தோடும், அதிர்ச்சியோடும் பார்த்தனர். கண்ணெதிரே நடைபெற்ற இந்த அதிசயத்தை ஏற்றுக்கொள்ள அவர்களால் முடியவில்லை. “நீ ஏதோ மந்திர தந்திர வித்தைகளை செய்து மாம்பழங்களை மாயமாய் மறையச் செய்துவிட்டாய். நீ ஒரு சூனியக்காரன்” என்றனர்.
“என்னது நான் சூனியக்காரனா? உள்ளே சென்று ஜகன்னாதனின் சன்னதியில் பாருங்கள்” என்றார். அனைவரும் மூலஸ்தானத்தை நோக்கி ஓட்டமாய் ஓடினர். என்ன அதிசயம்… இவர்கள் அனைவரும் வியப்பின் உச்சிக்கே செல்லும் வகையில், ஜகந்நாதரின் முன்பு மாம்பழக் கொட்டைகளும், தோல்களும் காணப்பட்டன.
அனைவரும் தாஸியாவின் கால்களில் வீழ்ந்தனர்…..!
“தாஸியா நீ அப்பழுக்கற்ற பக்தன், உண்மையான தொண்டன், உன் பக்தியின் மூலம் இறைவனை அடிமைப்படுத்தியவன், உன் பக்திக்கு முன்னாள் நாங்கள் ஒன்றுமேயில்லை எங்களை மன்னித்துவிடு” என்று கூறி, ஜகந்நாதரின் திருவுருவத்தின் மீதிருந்த மாலையை எடுத்து அவருக்கு சூட்டி மரியாதை செய்தனர்.
இதைகக் கேட்ட தாஸியா அவர்களின் பாதங்களில் தான் பதிலுக்கு வீழ்ந்து, அவர்களின் பாத தூளியை எடுத்து தன் உடல் முழுதும் பூசிக்கொண்டு “ஜகந்நாதனை தினசரி தரிசிக்கும் வாய்ப்பை பெற்ற, அவனுக்கு பூஜைகள் செய்யும் பாக்கியம் பெற்ற நீங்கள் தானே என்னை விட பாக்கியசாலிகள்” என்றார்.
இராம க்ருஷ்ணா ஹரி பாண்டுரங்க ஹரி

Thursday, August 12

The Cofee Cup Analogy

 

You are holding a cup of coffee when someone comes along and bumps into you or shakes your arm, making you spill your coffee everywhere.

Why did you spill the coffee?
"Because someone bumped into me!!!"
Wrong answer.
You spilled the coffee because there was coffee in your cup.
Had there been tea in the cup, you would have spilled tea.
Whatever is inside the cup is what will spill out.
Therefore, when life comes along and shakes you, whatever is inside you will come out. It's easy to fake it, until you get rattled.
So we have to ask ourselves... “what's in my cup?"
When life gets tough, what spills over?
Joy, gratefulness, peace and humility?
Anger, bitterness, harsh words and reactions?
Life provides the cup, YOU choose how to fill it.
Today let's work towards filling our cups with gratitude, forgiveness, joy, words of affirmation, kindness, gentleness and love for others.
(Shared from a friend whose cup is full of goodness and inspiration.)

Friday, July 2

Have you seen God | Sri Ramakrishna Paramahamsa

 ராமக்ருஷ்ண பரமஹம்ஸரிடம் டாக்டர் ஒருவர் வந்தார்.

“ஐயா நீங்கள் காளியைப் பார்த்திருக்கிறீர்களா?” என கேள்வி கேட்டார். “ஓ! பார்த்திருக்கிறேனே!! காலையில் கூட அவளிடம் பேசினேன்” என்று பரமஹம்சர் பதிலளித்தார்.
“நீங்கள் பார்த்தது உண்மை என்றால் எனக்குக் காட்டுங்கள்”
சுற்றி அமர்ந்திருந்தவர்கள் பரமஹம்ஸர் என்ன பதில் சொல்வார் என ஆவலோடு காத்திருந்தனர்.அப்போது சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் கேள்வி எழுப்பிய டாக்டரிடம், “நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள்?” என்று வினவினார் ராமக்ருஷ்ண பரமஹம்ஸர்.

“நான் டாக்டர் வேலை செய்கிறேன்”
“அப்படியானால் டாக்டர் தொழில் நன்றாகத் தெரியும் தானே?”
“நன்றாகத் தெரியும்”
“அப்படியானால் என்னை ஒரு டாக்டர் ஆக்குங்கள்”
“அது எப்படி? நீங்கள் டாக்டருக்குப் படிக்க வேண்டுமே?”
“டாக்டராவதற்கே ஒரு படிப்பு வேண்டும் என்றால்,கடவுளைப் பார்க்க ஒரு படிப்பு வேண்டாமா? நான் அதைப்படித்திருக்கிறேன்.நீங்களும் அதைப் படித்தால் கடவுளைக் காணலாம்” என்றார் ராமக்ருஷ்ண பரமஹம்ஸர்.
எல்லோரும் வியந்து மகிழ்ந்தனர்.

தீசக் கத்தரிக்காய் கறி | Burnt Brinjal Curry for Neivedhyam

 தீசக் கத்தரிக்காய் கறி'

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
பரமாச்சார்யாரை தெய்வமாகக் கொண்டாடிய பல பக்தர்களில் ஒருவரது கதை.
அந்த பக்தருக்கு மூன்று மகன்கள். மூவருக்கும்திருமணமாகி ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாகவாழ்ந்து வந்தனர்.ஒவ்வொரு மாட்டுப்பெண்ணும் ஒவ்வொரு வாரம் சமையல் செய்வது வருவது வழக்கம்.
அப்படி இருக்கும் போது, இந்த பக்தர் தினமும்பூஜை முடிந்தவுடன்

நைவேத்தியத்திற்கு தயாராக அன்று செய்துள்ள அனைத்தையுமே வைத்து படைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.(அன்னம் மட்டுமே காண்பிப்பதுபலர்வழக்கம்)நைவேத்தியம் நம்பெரியாவாளுக்குத்தான்
.அவ்வாறு ஒருநாள் அவரது கடைசி மருமகள்சமையல் முறை.அன்று அன்னத்துடன் ஒருகத்தரிக்காய் வதக்கல்கறியும் பண்ணியிருந்தார்.
சிரத்தையுடன்தான் சமைத்தாள் அந்தப் பெண்.ஆனால் கறி கொஞ்சம் தீய்ந்து விட்டது நைவேத்திய நேரம் வந்தவுடன் வழக்கப்படி சமைத்த எல்லாப் பண்டங்களையும் வைத்தாள்
.அவர், "ஏனம்மா இப்படி கத்தரிக்காய் தீய்ந்துவிட்டது" என்று கேட்கிறார்.மாட்டுப்பெண்,"என்ன செய்வது மாமா இப்படி ஆகிவிட்டது"என்று சொல்கிறாள்.இது நடந்து நான்கைந்து மாதங்கள் ஆகியிருக்கும்.பெரியவா தரிசனத்துக்கு இந்த குடும்பத்தினர் சென்றுள்ளனர்.
அப்போது பெரியவா யதேச்சையாக அந்த பக்தரின் கடைசி மாட்டுப்பெண்ணைப் பார்த்து "நீ தானே அன்றைக்கு ஒரு நாள் நைவேத்தியத்திற்கு தீச கத்தரிக்காய் வைத்தவள் என்று சொல்லி புன் சிரிப்பு சிரிக்கிறார்.
அவர்களுக்கு ஒரே ஆச்சர்யம்.தனது வீட்டில் நடந்தபூஜையில் பெரியவாகலந்துகொண்டுள்ளார்என்றபூரிப்பு ஒருபக்கம்இருந்தாலும்,அதை இவ்வளவு துல்லியமாகக் கூற யாரால் முடியும்? என்ற வியப்பு.பக்தர்களின்பால் அவர் காட்டும் பரிவு,அன்பு இதைத்தான் "தாயிற்சிறந்த தயாவான தத்துவன்"என்று நாம் புரிந்து கொள்வோம்
Jaya Jaya Shankara hare hare Shankara

Wednesday, June 23

Thiruneetru Padhigam | திருநீற்றுப் பதிகம்

Thiru Gnanasambandar’s Thiruneetru Padhigam, consists of 11 hymns in praise of the Sacred Ash Vibhuthi**, which is called Thiru Neeru (திருநீறு) in Thamizh. In these hymns, Sambandar sings the glory & grandeur of the Sacred Ash of the God of Aalavaai (Madurai), smearing which, the then Pandya king was miraculously cured of acute heat & burning disease which engulfed his whole body.

 


Thiruneetru Padhigam - Rendered by students of SāMā Music Repertory Lyrics - Traditional - Thirugnanasambandar Translation - Sri. Rajagopal Ramanan Vocals Arvind Venkatesh Kamaleshwar Mani Sai Maalavika Mayur Davay Violin - Sayee Rakshith Ghatam - Shri Sainath Music Arrangement, Mixing & Mastering - Sai Aditya Visuals - Aravind Davay, Sai Maalavika

Related Posts Plugin for WordPress, Blogger...