Thursday, June 27

Make marriages simple - Mahaperiyavaa

 

735021_514737638557024_2124851521_nGirls today are sometimes married at the age of 25 or 30, far beyond the limit fixed by the law. The inability to raise the money required for the wedding is one reason for this. All the ostentation at weddings, dowry and other gifts given to the groom's people have no sanction in the shastras. To demand a suit for the groom or a pair of boots, an expensive wrist-watch or other luxury articles is nothing but extortion. It is as good as milking the bride's party dry. This kind of plunder is not approved by the shastras. So too the procession called "janavasam", with all its glitter, taken out on the eve of the wedding as though it were an essential part of the ceremonies.
In the past, when the bride and groom were very young, the wedding included functions to keep the couple in good cheer since they would perhaps have felt uncomfortable before the smoke of the sacred fire. There were elements of play like nalangu and also the procession.
"Kanyam Kanaka-sampannam" (the bride adorned with gold): these words occur in the sastras relating to the marriage rites. Gold symbolises the grace of Laksmi but a mangalasutra with a grain of gold as part of it is enough. There is no need for other types of expensive jewellery, diamond studs, and so on. No silks are required. A cotton sari will serve the purpose of the kurapudavai. Above all the custom of dowry must be scrapped. There is also no justification on holding a lavish wedding dinner for the whole neighbourhood. Nor is a music or dance recital needed. A big pandal too is not necessary.

Periyava–Humour

 

521532_505400676167657_1605431185_nஒருமுறை ஏதோ யாத்திரையின் போது வழியில் ஒரு கிராமத்தில் "தொம்பன் கூத்தாடி" குடும்பம் வித்தை காட்டிக் கொண்டிருந்தது. ஒரு கம்பத்தின் மேல் ஏறி ஒருவன் தலைகீழாக தொங்கினான். பிறகு அப்படியே இன்னொரு கம்பத்துக்கு தாவினான். சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருந்த ஜனங்கள் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர். கடைசியில் அந்த ஊர் பெரிய மனிதர் அந்த கூத்தாடிகளுக்கு அரிசி,பருப்பு முதலிய பண்டங்களையும்,வேஷ்டி, பணம் எல்லாம் குடுத்தார்.
இதைப் பார்த்துக் கொண்டே இருந்த பெரியவா ஒரு புன்முறுவலோடு மடத்து மானேஜரிடம் "நானும் சங்கராச்சார்யார் வேஷம் போட்ட தொம்பங்கூத்தாடிதான் ! ஏன்னா, நானும் வித்தை காட்டறேனே! மாடு, யானை, ஒட்டகம், பல்லக்கு, பூஜை..ன்னு வரிசையா வெச்சிண்டு வித்தை காட்றேன்...." என்றார்.
பிறகு மானேஜரிடம் "அவனுக்கு அரிசி, புளி, பணம் குடுங்கோ" என்றார்.

Wednesday, June 26

Sabarimala swami names per year

Names Of Swamy According To Their Year 
1.1st Year WhoTakes Ayyappa Deeksha is Called As KANNI SWAMY
2. 2nd Time Ayyappas Are Called As KATHTHI SWAMY.
3. 3rd Year Ayyappas Are Called As GANTA SWAMY.
4. 4th Year Swamy Are Called As GADA SWAMY.
5. 5th Year Swamy Are Called As PERU SWAMY.
6. 6th Year Swamy Are Called As JYOTI SWAMY.
7. 7th Year Swamy Are Called As SURYA SWAMY.
8. 8th Year Swamy Are Called As CHANDRA SWAMY.
9. 9th Year Swamy Are Called As TRISHULA SWAMY.
10. 10th Year Swamy Are Called As VISHNU CHAKRA SWAMY.
11. 11th Year Swamy Are Called As SHANKADHARA SWAMY.
12. 12th Year Swamy Are Called As NAGABHARANA SWAMY.
13. 13th Year Swamy Are Called As SRIHARI SWAMY.
14. 14th Year Swamy Are Called As PADMA SWAMY.
15. 15th Year Swamy Are Called As SRI SWAMY.
16. 16th Year Swamy Are Called As SRI SABARI (RATHIGIRI) 
17. 17th Year Swamy Are Called As OMKAARA SWAMY.
18. 18th Year Swamy Are Called As NARIKELA SWAMY (Guruswamy)

Sunday, June 23

How Kanchi Mahaswamigal converted Kannadasan from atheist to theist

 

அர்த்தமுள்ள இந்து மதம் ” அரும்பி மலர்ந்த கதை�!!!!

கண்ணதாசனை மாற்றிய காஞ்சிப் பெரியவர்

சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில்428216_490884900952568_1794452869_n போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.

காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்ட தேவர் அவர்கள், சிவஸ்தானம் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி ‘விபத்து நேர்ந்து விட்டது’ என்று சொன்ன மாத்திரத்தில் ‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’ என்றும் பெரியவர் கேட்க, அதிர்ந்து போனார் தேவர். கண்கள் கலங்க வியப்பும் வருத்தமுமாய் “அவர் படுகாயத்துடன் நினைவில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக் கூறினார்.

தேவரின் கவலையை உணர்ந்த பெரியவர், ‘சரி, கவலைப்படாதே. இந்த விபூதியைக் கொண்டுபோய், அவன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவு போடு, மீதி இருப்பதை அவன் தலையணைக்குக் கீழ் வைத்துவிடு’ என்று தன் திருக்கரங்களால் விபூதி எடுத்து மடித்துத் தர, தேவர் விதிர் விதிர்த்து, பெரியவரை மறுத்துப் பேசவும் துணிவின்றி தயங்க, மீண்டும் பெரியவரின் கட்டளைக்கிணங்கி தயக்கத்தோடு கைநீட்டி விபூதியைப் பெறுகிறார்.

தேவரின் தயக்கத்திற்குக் காரணம், கண்ணதாசன் நாத்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, திராவிட கட்சிகளின் சார்பில் பிராமணர்களையும் சனாதன தர்மத்தையும் நாக்கில் நரம்பில்லாது போல் மேடைகளில் பேசி வந்த காலகட்டம் அது. விபத்து நடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு எதிரிலேயே நடந்த கூட்டத்தின் மேடையில் படுபயங்கரமாகப் பேசி மடாதிபதிகளை இழிவுபடுத்திப் பேசியிருந்தார். எனவே அவரிடம் போய் இந்த விபூதியை எப்படிக் கொடுப்பது என்பதுதான் தேவரின் பெரியத் தயக்கமாயிருந்தது.

ஆனால் முக்காலமுணர்ந்த ஞானியாகிய பெரியவர், தேவரின் மனத்தயக்கத்தை உணர்ந்து ‘தயங்காமல் கொண்டுபோய் பூசு. சூரியனை சில சமயம் மேகம் மறைப்பது போல் நாத்திகமேகம் இதுவரை அவனை மறைத்திருந்தது. இனி அவன் சூரியனாகத் திகழ்வான். அவன் எப்பேர்ப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவன் தெரியுமா? கோவில் திருப்பணி செய்வதற்கே பிறந்தவர்கள் போல் திகழ்ந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத் தாத்தா. ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தாத்தா. காமாக்ஷி கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தகப்பனார். இப்ப புரியறதா?’ என திருவாய் மலர்ந்தருளினார்.

தேவர் மனந்தெளிந்தவராய் பெரியவரை வணங்கி விடைபெற்று, நேராக மருத்துவமனைக்குச் சென்றார். நினைவிழந்து படுத்திருந்த கண்ணதாசனின் நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டு சிறிது விபூதியை வாயிலும் இட்டு, மீதியை தலையணையின் கீழ் வைத்துவிட்டு வீடு திரும்பினார். அவர் சிந்தனையெல்லாம் கண்ணதாசன் நினைவு திரும்பி நடந்ததை அறிந்து என்ன சொல்வாரோ என்றே நினைத்தது.

மறுநாள் தேவர் மருத்துவமனை சென்று கண்ணதாசனின் படுக்கையை சற்றே படபடக்கும் நெஞ்சோடு நெருங்கியபோது கண்ணதாசனுக்கு நினைவு திரும்பி கண் விழித்திருந்தார். தேவரைப் பார்த்தவுடன், ‘வாங்க, எத்தனை நாளா இப்படி படுக்கையில் இருக்கேன். கொஞ்சம் கண்ணாடியை எடுத்துக் கொடுங்களேன். என் முகத்தைப் பார்க்கணும்’ என்றார்.

நேற்று இட்ட விபூதி இன்னமும் நெற்றியில் திகழ, தேவர் தயங்கியபடியே தந்த கண்ணாடியில் தன் முகம் கண்ட கண்ணதாசன் ‘இதென்ன விபூதி?’ என்று தேவரை ஏறிட்டுப் பார்க்க, வேறு வழியின்றி வந்தது வரட்டுமென தேவர், தான் பெரியவரைப் பார்த்ததையும், பெரியவர் ஆசீர்வாதம் செய்து விபூதி கொடுத்ததையும் சொல்ல, கண்ணதாசனின் விழிகளில் அருவியெனக் கொட்டியது கண்ணீர். திகைத்து நின்ற தேவரின் செவிகளில் தேனாகப் பாயந்தது கண்ணதாசனின் வார்த்தைகள், ‘எனக்கா? என்னிடமா இவ்வளவு கருணை? போனவாரம்தான் அவரை, ஐயோ’ என வாய்விட்டுப் புலம்பி அழுததோடு, தேவரிடம் ஒரு வேண்டுகோளையும் சமர்ப்பித்தார். ‘எனக்கு உடல்நலமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறும் சமயம் நான் வீட்டிற்குச் செல்லமாட்டேன். இந்தப் பாவியிடம் கருணைவைத்த அந்த மகானிடம் முதலில் என்னை தயவுசெய்து அழைத்துச் செல்லுங்கள்’ என மனமுருகி வேண்டினார்.

கண்ணதாசன் வேண்டியபடியே அந்த நல்ல சந்திப்பும், பாவமன்னிப்பும் நடந்தது. மாறியது மனம், நன்றியில் ஊறியது தினம், வீறிட்டு வெளிவந்தது ஒரு கவிதை. அக்கவிதையை எடுத்துக் கொண்டு, பெரியவரை நேரில் கண்டு வணங்கி, கவிதையைச் சமர்ப்பித்தார், கண்ணதாசன். அக்கவிதை இதோ :

பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற
தீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து
கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும் முழுமூர்த்தம்
கலிமொய்க்கும் இவ்வுலகைக் காக்கவந்த கண்கண்ட தெய்வம்
எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத் தலைவனென
தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!

கவிதை வரிகளைக் கண்ட பெரியவர், கண்ணதாசனைக் கனிவோடு நோக்கி, ‘அனந்த கோடி அற்புத லீலா சாகித்ய மாயமானுஷாய நமோ நமஹ, அர்த்தநாரி திருவண்ணாமலை சேஷாத்ரி மகானுக்கல்லவா இது பொருந்தும்’ என்று அருளாசிக் கூறி, ‘அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் நிர்மலப் பொருள் ஞானசூரியனாம், மதத்தின் பெருமையை எழுது’ என்று திருவாய் மலர்ந்தருள, அக்கணமே கண்ணதாசனின் மனதில் “அர்த்தமுள்ள இந்துமதம்” அழகாய் அரும்பி பலநாள் உழைப்பில் இதழ்விரித்து மணம் வீசியது.

Related Posts Plugin for WordPress, Blogger...